தங்காக், 04 ஜூன் (பெர்னாமா) - இரு நாட்களுக்கு முன்னர் புக்கிட் கம்பீரில் ஆடவர் ஒருவர் தமது மனைவியைக் கழுத்தறுத்து கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் சம்பவம் குடும்ப பிரச்சனையினால் நிகழ்ந்திருக்கலாம் என்று போலீஸ் நம்புகிறது.
Kampung Pengkalan Kota Durian Chondong-இல் தமது மாமியார் வீட்டில் பல வாகனங்களை எரித்த சம்பவம் தொடர்பில் அச்சந்தேக நபரை நேற்று காலை போலீஸ் கைது செய்ததாக தங்காக் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரின்டென்டன் ரோஸ்லான் முஹமட் தாலிப் தெரிவித்தார்.
விசாரணையின் போது, மனக்கலக்கத்தோடு காணப்பட்ட அந்நபர், தமது மனைவியை காணவில்லை என்று கூறியவுடன், போலீசார் உடனடியாக அவரது வீட்டிற்குச் சென்று விசாரித்ததாக சூப்ரின்டென்டன் ரோஸ்லான் இன்று தொடர்பு கொண்டபோது கூறினார்.
புதன்கிழமை தொடங்கி ஏழு நாட்களுக்கு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள அந்நபர், தேசத் துரோகச் செயலுக்காக, குற்றவியல் சட்டம் செக்ஷன் 427-இல் குற்றப் பதிவுகளையும் கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
புக்கிட் கம்பீரில் பெண்ணை கழுத்தறுத்துக் கொன்றதாக சந்தேகிக்கப்படும் ஆடவர், பின்னர் மூவார், பாகோவில் உள்ள தமது மாமியார் வீட்டையும் எரிக்க முயற்சித்ததாக ஊடகங்கள் முன்னதாக செய்தி வெளியிட்டிருந்தன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)