Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

2025 ஹவானா கொண்டாட்டம்; 80% முன்னேற்பாட்டுப் பணிகள் நிறைவு

03/06/2025 06:11 PM

கோலாலம்பூர் , 03 ஜூன் (பெர்னாமா) -- ஜூன் 14-ஆம் தேதி, நடைபெற திட்டமிடப்பட்டிருக்கும் 2025 ஹவானா, தேசிய ஊடகவியலாளர் தினக் கொண்டாட்டத்தின் ஏற்பாடுகள், 80 விழுக்காடு நிறைவடைந்துள்ளன.

இம்முறை கொண்டாட்டம் சீராகவும் வெற்றிகரமாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய, அனைத்து பெர்னாமா ஊழியர்களும் தீவிரமாக ஏற்பாட்டு பணிகளில் ஈடுபட்டுள்ளதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி டத்தின் படுக்கா நூருல் அஃபிடா கமாலுடின் தெரிவித்தார்.

''80 விழுக்காடு நிறைவடைந்து விட்டதாக நான் நம்புகிறேன். இன்று மாலையும் நாங்கள் சந்திப்பு கூட்டத்தை நடத்தி, வருகையாளர்கள் மனநிறைவுக் கொள்ளும் வகையில் இம்முறை ஏற்பாடுகள் சீராகவும் வெற்றிகரமாகவும் நடைபெறுவதை உறுதி செய்வோம்,'' என்றார் அவர்.

இன்று விஸ்மா பெர்னாமாவில் நடைபெற்ற 2025 2025 ஹவானா ஆதரவாளர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சிக்குப் பின்னர், நூருல் அஃபிடா அதனைக் கூறினார்.

இந்நிகழ்ச்சியை, தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில், அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)