Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

தற்கொலை தொடர்பான உள்ளடக்கங்களை ஒளிபரப்புவதில் பொறுப்பாகச் செயல்பட வேண்டும்

03/06/2025 04:57 PM

பெட்டாலிங் ஜெயா, 03 ஜூன் (பெர்னாமா) -- தற்கொலை தொடர்பான உள்ளடக்கம் உட்பட அனைத்து விதமான படைப்புகளை ஒளிப்பரப்புவதில் ஊடக நிறுவனங்கள் பொறுப்பாக செயல்பட வேண்டும்.

பிரதான ஊடகங்கள் மட்டுமில்லாமல், சமூக ஊடக தளங்களை இயக்கும் நிறுவனங்களும் இக்கடப்பாட்டை கொண்டிருக்க வேண்டும் என்று தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.

''இது வெறும் சட்டப் பிரச்சினை மட்டுமல்ல. இந்த தளங்களின் அணுகுமுறை மிகவும் உறுதியானதாக இருப்பதாக நாம் கூறலாம். அவை மிக விரைவாக லாபம் ஈட்டுகின்றன. மேலும் சட்டத்திற்கு இணங்குவதில் மிகவும் மெதுவாக உள்ளன. மலேசியாவில் மட்டுமல்ல, பல நாடுகளிலும். நான் இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, ஃபிஜி மற்றும் பப்புவா நியூ கினியைச் சேர்ந்த எனது சக ஊழியர்களிடம் பேசினேன்,'' என்றார் அவர்.

செவ்வாய்க்கிழமை, பெட்டாலிங் ஜெயாவில் தற்கொலை உள்ளடக்க வழிகாட்டுதல்கள் அறிமுக விழாவில் கலந்து கொண்ட பின்னர், ஃபஹ்மி அவ்வாறு கூறினார்.

சமூக ஊடக தள நிறுவனங்கள் நடப்பில் உள்ள சட்டங்களை புறக்கணிப்பதாக ஆசிய பசிபிக் தொடர்பு அமைச்சர்கள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)