கோலாலம்பூர், 03 ஜூன் (பெர்னாமா) - இன்று இஸ்தானா நெகாராவில் சட்ட சீர்த்திருத்தத்தின் அடைவுநிலை, அதன் திட்ட விளக்கம் மற்றும் தேசிய தலைமை கணக்காய்வாளர் அறிக்கை ஆகியவை மாட்சிமை தங்கிய மாமன்னர், சுல்தான் இப்ராஹிமிடம் வழங்கப்பட்டது.
சட்ட சீர்த்திருத்தத்தின் அடைவுநிலை மற்றும் அதன் திட்ட விளக்கத்தை, சட்டம் மற்றும் கழக சீர்த்திருத்தத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அசாலினா ஒத்மான் சைட், மாமன்னர் சுல்தான் இப்ராஹிமிடம் வழங்கியதாக தமது முகநூல் பக்கத்தில் மாமன்னர் பதிவிட்டிருந்தார்.
2025-ஆம் ஆண்டுக்கான இரண்டாவது தேசிய தலைமை கணக்காய்வாளரின் அறிக்கையை தேசிய தலைமை கணக்காய்வாளர் டத்தோ ஶ்ரீ வான் ச்ய்ராயா வான் முஹமட் ரட்சி மாமன்னரிடம் விளக்கினார்.
அவ்விரு விளக்கவுரைகளும் தலா ஒரு மணி நேரம் நீடித்தன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)