கோலாலம்பூர், 01 ஜூன் (பெர்னாமா) - இன்று கொண்டாடப்படும் அரச மலேசிய ஆகாயப்படை TUDM- இன் 67ஆவது நிறைவாண்டை முன்னிட்டு நாட்டிலுள்ள அனைத்து ஆகாயப்படை வீரர்களுக்கும் மூத்த பணியாளர்களுக்கும் மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிமும் பேரரசியார் ராஜா ஸரித் சோஃப்பியாவும் தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்து கொண்டனர்.
மலேசிய இராணுவப் படையின் உயர் தளபதியான, சுல்தான் இப்ராஹிம், நாட்டின் வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாப்பதில் TUDM பணியாளர்களின் அர்ப்பணிப்புக்கு தமது உளமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்து கொண்டார்.
தாய்நாட்டின் மீது கொண்டுள்ள அளவு கடந்த அன்பால் தொடர்ந்து முன்னேற்றம் கண்டு, சிறந்து விளங்கி வருவதுடன், அனைவராலும் மதிக்கப்படும் அமைப்பாகவும் அரச மலேசிய ஆகாயப்படை விளங்குகிறது.
இதே நிலைப்பாடு இறைவனின் ஆசிர்வாதத்திலும் பாதுகாப்பிலும் எப்போதும் நீடித்திருக்க வேண்டும் என்று தமது அதிகாரப்பூர்வ முகநூல் பதிவில் சுல்தான் சுல்தான் இப்ராஹிம் தெரிவித்திருந்தார்.
அதேவேளையில் இத்துறையில் உயிரிழந்தவர்களையும் நினைவுகூர்ந்த மாமன்னர், தமது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்து கொண்டார்.
இதனிடையே, 'விமான சக்தி, தேசிய இறையாண்மையின் கேடயம்' என்ற கருபொருளில் இவ்வாண்டு TUDM-இன் 67ஆம் ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டப்படுகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)