Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
 உலகம்

அமெரிக்கா; தாக்குதலில் அறுவர் காயம்

02/06/2025 01:14 PM

கொலராடோ, 02 ஜூன் (பெர்னாமா) --   அமெரிக்கா, கொலராடோ மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் அறுவர் காயமுற்றனர்.

காயமுற்றவர்கள் அனைவரும் வயதானவர்கள் என்றும், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், அந்நாட்டின் மத்தியப் புலனாய்வுத் துறை, FBI தெரிவித்திருக்கிறது.

பாலஸ்தீனத்தை விடுதலை செய்யுங்கள் என்ற முழக்கத்துடன், 45 வயது ஆடவர் ஒருவர் இத்தாக்குதலை மேற்கொண்டதாக சம்பவத்தை நேரில் பார்த்த சிலர் கூறினர்.

முஹமட் சொலிமான் எனும் அந்த ஆடவர், எரி குண்டுகளைக் கொண்டு தாக்குதலை நடத்தியதாக போலீஸ் தெரிவித்திருக்கிறது.

சம்பவம் நிகழ்ந்த இடத்தில் வெடிகுண்டு அகற்றும் பிரிவு சோதனை மேற்கொண்டு வருகின்றது.

தனிப்பட்ட முறையிலேயே அந்த ஆடவர் இத்தாக்குதலை மேற்கொண்டிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)