சியோல், 02 ஜூன் (பெர்னாமா) -- பல மாதங்களாக நீடித்து வந்த அரசியல் நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தென் கொரியாவின் புதிய அதிபரை தேர்ந்தெடுக்கும் பொருட்டு அந்நாட்டு மக்கள் நாளை நடைபெறவிருக்கும் தேர்தலில் வாக்களிக்கவுள்ளனர்.
இராணுவச் சட்டத்தை அறிவித்ததால், பதவியில் இருந்து முன்னாள் அதிபர் யூன் சுக் யோல் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.
ஜனநாயகக் கட்சியை பிரதிநிதித்து போட்டியிடும் லீ ஜே யுங் வெற்றி பெறுவார் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், போட்டியில் களமிறங்கியிருக்கும் அரசியல் கட்சிகள் கடைசி நேரப் பிரச்சாரங்களில் தீவிரமாகப் ஈடுபட்டு வருக்கின்றன.
தேர்தலில் வெற்றி பெறும் வேட்பாளர், புதன்கிழமை அதிபராக அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்பார்.
முன்னாள் அதிபர் யூனின் நடவடிக்கையால் அந்நாட்டில் ஏற்பட்டுள்ள பிளவைச் சரிசெய்வதுடன், அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பின் வரிக் கொள்கை மற்றும் வட கொரியாவின் அணுசக்தித் திட்டம் ஆகியவற்றை கையாள்வதில் புதிய அதிபர் கவனம் செலுத்த வேண்டும்.
நாளை நடைபெறவுள்ள தேர்தலுக்கு முன்னதாக, ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் முன்கூட்டியே வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.
மற்றொரு நிலவரத்தில், போலந்தின் அதிபர் தேர்தலில், ரஃபால் ட்ர்சாஸ்கோவ்ஸ்கி வெற்றி பெற்றுள்ளார்.
தாராளவாத ஐரோப்பிய ஒன்றிய சார்பு வேட்பாளரான 53 வயது ட்ர்சாஸ்கோவ்ஸ்கி 50.3 விழுக்காடு வாக்குகள் பெற்ற நிலையில், அவரை எதிர்த்து போட்டியிட்ட கரோல் நவ்ரோக்கி 49.7 விழுக்காடு வாக்குகள் பெற்றதாக அந்நாட்டின் ஊடகங்கள் தெரிவித்தன.
புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 18-ஆம் தேதி நடைபெற்றது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)