காசா, 02 ஜூன் (பெர்னாமா) -- காசாவில் உணவுகளை விநியோகம் செய்யும் இடத்திற்கு அருகே, இஸ்ரேல் இராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் பெண்கள் உட்பட 31 பேர் கொல்லப்பட்டனர்.
மேலும், 150 பேர் காயமடைந்தனர்.
காசா மனிதாபிமான அறக்கட்டளையின் ஓர் உதவித் தளத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இருந்த மக்கள் கூட்டத்தின் மீது இஸ்ரேலியப் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும் இச்சம்பவத்தை இஸ்ரேல் இராணுவம் மறுத்துள்ளது.
காசாவில் அசம்பாவிதங்கள் எதுவுமின்றி உணவு விநியோகம் மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்தது.
ஹமாஸ் அதிக அளவு உதவிகளை மோசடி செய்வதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியிருக்கும் நிலையில், அதனைக் களைவதற்குப் புதிய வழிமுறை அவசியம் என்று அது தெரிவித்திருக்கிறது.
இஸ்ரேலின் அக்கூற்றை ஐ.நா. மருத்திருக்கிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)