கோலாலம்பூர், 01 ஜூன் (பெர்னாமா) - ஆழமான ஜனநாயகத்தின் கொள்கைகளை நிலைநிறுத்தி உள்ளடக்கிய வளர்ச்சியை ஆதரித்து மற்றும் தலைமுறை தலைமுறையாகக் கடைபிடிக்கப்படும் ஒற்றுமையை தேசிய முன்னணி விதைத்துள்ளது.
இக்கட்சி பன்முகத்தன்மையைப் பின்பற்றி வேறுபாடுகளைக் கடந்து, அமைதியான, வளமான மற்றும் மீள்தன்மை கொண்ட மலேசியாவின் லட்சியங்களின் கீழ் மக்களை ஒன்றிணைக்கும் தளமாக மாறியுள்ளதாக அதன் தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார்.
51 ஆம் ஆண்டில் காலடி எடுத்து வைத்திருக்கும் தேசிய முன்னணிக்கு சாஹிட் முகநூலில் தமது நன்றிகளைப் பதிவிட்டிருந்தார்.
பல வரலாறுகளைக் கொண்டிருக்கும் தேசிய முன்னணி, மலேசியாவை கட்டியெழுப்புவதில் பக்கபலமாக தொடர்ந்து நிலைத்திருக்கும் ஓர் அரசியல் தளம் என்றும் அவர் கூறினார்.
மாற்றங்களையும் சவால்களையும் கையாள்வதில் தேசிய முன்னணி உறுதியாக உள்ளது.
கடினமான மற்றும் சோதனை காலங்களிலும் ஒருபோதும் பின்வாங்காத விசுவாசமான அனைத்து உறுப்பினர்கள், கட்சி கேந்திரங்கள், அனைத்து மட்டங்களில் உள்ள தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஆகியோருக்கு தேசிய முன்னணியின் 51ஆவது நிறைவு ஆண்டை முன்னிட்டு துணைப் பிரதமருமான சாஹிட் தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)