Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

தெங்கு சஃப்ருல் கையெழுத்திட்ட உறுதிமொழி அமல்படுத்த முடியவில்லை

31/05/2025 05:38 PM

சிரம்பான்,31 மே (பெர்னாமா) -- 15-ஆவது பொது தேர்தலில் தேசிய முன்னனி கட்சியின் வேட்பாளராக போட்டியிட்ட தெங்கு டத்தோ ஶ்ரீ சஃப்ருல் தெங்கு அப்துல் அசிஸ் தமது வெற்றியைத் தவறவிட்டதால், அவர் கையெழுத்திட்ட உறுதிமொழி அமல்படுத்த முடியவில்லை.

மாறாக, முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சரான தெங்கு சஃப்ருல் செனட்டர் என்ற அடிப்படையில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று அம்னோவின் துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ முஹமட் ஹசான் கூறினார்.

''அவர்கள் வெற்றி பெற்றால், அந்த இடம் அக்கட்சிக்குச் சொந்தமானது. மாறாக, அந்த தனிநபருக்கு சொந்தமானது அல்ல. வேட்பாளர்களாக இருந்து வெற்றி பெற்ற நபர்கள் கட்சியில் ஏற்படும் செலவுகளைத் திருப்பி செலுத்துவது, பிற விவகாரங்கள் உட்பட பல ஒப்பந்தங்களில் அவர்கள் கையெழுத்திடுவர்,'' என்றார் அவர்.

இன்று, நெகிரி செம்பிலான், சிரம்பானில் நடைபெற்ற மதிய உணவு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர், டத்தோ ஶ்ரீ முஹமட் ஹசான் செய்தியாளர்களிடம் அதனை கூறினார்.

அம்னோவில் இருந்து விலகி கெஅடிலான் கட்சியில் இணையப் போவதாக அறிவித்த தெங்கு சஃப்ருல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு, அக்கட்சியின் உச்சமன்ற செயற்குழு உறுப்பினர் டத்தோ டாக்டர் முஹ்மட் புவாட்  Puad Zarkashi வெளியிட்டுள்ள அறிக்கை குறித்து முன்னதாக முஹமட் ஹசான் கருத்துரைத்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ) 502