தோக்கியோ, 30 மே (பெர்னாமா) -- 2025-ஆம் ஆண்டு ஆசிய-பசிபிக் தொலைத்தொடர்பு அமைச்சர்கள் கூட்டம், ஏ.பி.டி.எம்.எம் 2025-இல் அறிமுகப்படுத்தப்படும் 2025-ஆம் ஆண்டு தோக்கியோ அறிக்கையை ஆதரிப்பதற்கு மலேசியா தனது முழு உறுதிப்பாட்டை வெளிப்படுத்தி இருக்கின்றது.
ஆசிய-பசிபிக் வட்டாரத்தை மேம்படுத்துவதற்கு மீள்தன்மை, உள்ளடக்கிய மற்றும் நிலையான இலக்கவியல் உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கான முயற்சிகளுக்கு அத்திட்டம் வலியுறுத்தும் என்று தொடர்பு அமைச்சர் டத்தோ ஃப்ஹமி பட்சில் தெரிவித்தார்.
''இதில், இலக்கவியலில் உலகளாவிய அணுகுமுறை, தொழில்நுட்ப சமத்துவம் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கான எங்களது உறுதிப்பாட்டை நாங்கள் மீண்டும் உறுதிப்படுத்துகிறோம். நாடு முழுவதும் கல்வி மற்றும் ஆதரவு நிறைந்த சுற்றுச்சூழல் அமைப்பு மூலம் தரமான அணுகல் மற்றும் தொழில்நுட்ப உள்ளடக்கத்தை உறுதி செய்வதற்கான விரிவாக முயற்சிகளை மலேசியா மேற்கொண்டுள்ளது,'' என்றார் அவர்.
தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளில் வட்டார ஒத்துழைப்பு வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட 2025-ஆம் ஆண்டு ஏ.பி.டி அமைச்சர்கள் கூட்டத்திற்கான மலேசியா குழுவிற்கு ஃப்ஹமி பட்சில் தலைமையேற்கிறார்.
இலக்கவியல் இணைப்பு, இலக்கவியல் கண்டுபிடிப்பு மற்றும் தொழில்முனைவு, நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு, இலக்கவியல் உள்ளடக்கம் மற்றும் திறன் மேம்பாடு, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் வட்டாரம் மற்றும் அனைத்துலக ஒத்துழைப்பு ஆகிய ஆறு முன்னுரிமைகளை வலியுறுத்தும் 2025-ஆம் ஆண்டு தோக்கியோ அறிக்கையின் அறிமுகம் இக்கூட்டத்தில் இடம்பெறும்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]