Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
 உலகம்

காசா தாக்குதல்; பலி எண்ணிக்கை 80-தைக் கடந்தது

27/05/2025 06:26 PM

காசா, 27 மே (பெர்னாமா) --   காசா முழுவதும், நேற்று அதிகாலை தொடங்கி இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதாலில் 80-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதுவரை, மரண எண்ணிக்கை 61 ஆயிரத்து 700-க்கும் அதிகமாக பதிவாகியிருப்பதாக காசா அரசாங்க ஊடக அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது.

அதேவேளையில், இடிபாடுகளுக்கு அடியில் இன்னும் ஆயிரக்கணக்கானோர் மாண்டிருக்கலாம் என்று நம்பப்பட்டுகிறது.

காசாவுக்காக, அமெரிக்கா முன்வைத்த போர் நிறுத்த திட்டத்திற்குப் பாலஸ்தீன குழு ஒப்புக் கொண்டதாக தகவல் வெளியாகியிக்கும் நிலையில், ஹமாஸ் மற்றும் அமெரிக்க அதிகாரிகளிடமிருந்து மாறுப்பட்ட செய்திகள் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது.

காசாவுக்கான உதவிகளை இஸ்ரேல் தொடர்ந்து தடுத்து தாக்குதல்களை அதிகரித்து வருகிறது.

இதனால், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நோயாளிகளுக்கான மருந்துகள் பற்றாக்குறையினால், சிரமம் ஏற்பட்டுள்ளதக உலக சுகாதார நிறுவனம் WHO-இன் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)