Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
 உலகம்

பல துறைகளில் ஒத்துழைக்க துருக்கியும் பாகிஸ்தானும் இணக்கம்

26/05/2025 05:54 PM

இஸ்தான்புல், 26 மே (பெர்னாமா) -- பாதுகாப்பு, எரிசக்தி மற்றும் போக்குவரத்து உட்பட பல துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்க, துருக்கி அதிபர் ரிச்செப் தயிப் எர்டுவனும், பாகிஸ்தானிய பிரதமர் ஷெபாஸ் ஷரிஃபும் நடத்திய சந்திப்பில் இணக்கம் காணப்பட்டதை எர்டுவனின் அலுவலகம் உறுதிபடுத்தியது.

அவ்விரண்டுமே இஸ்லாமிய நாடுகள் என்பதால் பல வரலாற்று தொடர்பை பகிர்ந்துகொள்ளும் அதேவேளையில், அவ்விரு நாடுகளும் வலுவான உறவையும் கொண்டுள்ளன.

பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் உட்பட இருதரப்பு உறவுகள், வட்டார மற்றும் அனைத்துலக பிரச்சனைகள் குறித்து அவ்விரு தலைவர்களும் விவாதிப்பார்கள் என்று எர்டுவனின் தகவல் தொடர்பு இயக்குநர் ஃபரெட்டின் அல்துன் முன்னதாக தமது X தளத்தில் பதிவிட்டிருந்தார்.

இதனிடையே, இந்திய காஷ்மீரில் நடத்தப்பட்ட இஸ்லாமிய தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா இராணுவம் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, மே மாத தொடக்கத்தில் எர்டுவன் தமது ஆதரவை பாகிஸ்தானுக்கு தெரிவித்திருந்தார்.

இதனால், இந்திய மளிகைக் கடைகள் மற்றும் முக்கிய இணைய சில்லறை விற்பனையாளர்கள் துருக்கிய தயாரிப்புகளைப் புறக்கணிக்கத் தொடங்கியதை அடுத்து, துருக்கியுடனான இந்தியாவின் நல்லுறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]