கோலாலம்பூர், 14 ஜனவரி (பெர்னாமா) -- நாடு முழுவதிலும் பல்வேறு விதமான நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவான, பி.கே.பி. அமல்படுத்தப்படுவதைத் தொடர்ந்து மக்களின் சுபீட்சத்தையும் வர்த்தக நிலைத்தன்மையையும் உறுதிசெய்ய 2021-ஆம் ஆண்டு வரவு செலவு திட்ட நடவடிக்கைகளில் தகுந்த மேம்பாடுகளைச் செய்ய நிதி அமைச்சு ஆராய்ந்து வருவதோடு பேச்சு வார்த்தையும் நடத்தி வருகிறது.
அதில் மாற்றம் செய்யும் அவசியம் ஏற்பட்டால் புதிய முனைப்புகளுடன் அதனை மேம்படுத்த தங்கள் தரப்புத் தயாராக இருப்பதாக நிதி அமைச்சர் செனட்டர் தெங்கு டத்தோ ஶ்ரீ சஃப்ருல் அப்துல் அசிஸ் தெரிவித்துள்ளார்.
''2021-ஆம் ஆண்டு வரவு செலவு திட்ட நடவடிக்கைகள் அமலாக்கத்தைத் தொடங்குவதில் எம்.ஓ.எஃப் குழு, தற்போது தீவிரமாகச் செயல்பட்டு வருவதை நான் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். 76 முனைப்புகளின் அமலாக்கத்தையும் எம்.ஓ.எஃப் தரப்புக் கண்காணிக்கவிருக்கிறது. கடந்த ஆண்டு பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களைப் போல இம்முனைப்புகளின் அமலாக்கம் தொடர்பான நிலை குறித்தும் பொதுவில் பகிரப்படும், என்று செனட்டர் தெங்கு டத்தோ ஶ்ரீ சஃப்ருல் தெங்கு அப்துல் அசிஸ் கூறினார்.
வியாழக்கிழமை, 36-ஆவது லக்சானா அறிக்கையை வெளியிடும்போது தெங்கு டத்தோ ஶ்ரீ சஃப்ருல் இவ்வாறு தெரிவித்தார்.
இதற்கு முன்னர் வங்கியிடமிருந்து கடன் பெறாத சிறு மற்றும் நடுத்தர தொழில்துறைக்கு முக்கியத்துவம் அளிக்கும் பி.கே.எஸ். பெஞ்சானா கடன் திட்டத்தின் கீழ் 200 கோடி ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.
இவ்வாண்டு ஜனவரி முதலாம் தேதி வரையில் 1149 கோடி ரிங்கிட் கடன் மதிப்புடைய 5,976 விண்ணப்பங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.
-- பெர்னாமா
எங்களைப் பற்றி
Malaysian National News Agency
Wisma BERNAMA
No.28 Jalan BERNAMA
Off Jalan Tun Razak
50400 Kuala Lumpur
Malaysia
Tel : +603-2693 9933 (General Line)
Email : helpdesk[at]bernama.com, tamil[at]bernama.com
பிரிவுகள்
• பொது
• அரசியல்
• உலகம்
• சிறப்புச் செய்தி
• விளையாட்டு
காப்புரிமை