BREAKING NEWS | Former inspector general of police (IGP) Tun Mohammed Hanif Omar died at 2.15 am today - Son | Bekas Ketua Polis Negara (KPN) Tun Mohammed Hanif Omar meninggal dunia pada 2.15 pagi tadi - Anak | |
கோலாலம்பூர், 16 செப்டம்பர் (பெர்னாமா) -- கொவிட்-19 நோயைக் கையாள்வதில், நாடு பெரும் சவால்களை எதிர்நோக்கி இருந்த போதிலும், மக்களிடையே ஒருமைப்பாடும் தேசப்பற்றும் தொடர்ந்து மேலோங்கி வருகிறது.
கடந்த மார்ச் மாதம் முதல், நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு பிகேபி, அமலில் இருக்கும் போது, நாட்டு மக்களின் நற்குணங்கள் வெளிக் கொணரப்பட்டதாக, தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ சுரியானி அஹமட் தெரிவித்திருக்கிறார்.
''நான் ஒரு உதாரணம் கொடுக்கிறேன். அண்மையில், பி.கே.பி காலக்கட்டத்தின் போது, சட்டவிரோத அந்நிய நாட்டு தொழிலாளர்கள் பிரச்சினையில் நாட்டின் மீது அவதூறு இழைத்தபோது, மக்கள் நாட்டை எவ்வாறு தற்காத்துக் கொண்டனர் என்பதை நம்மால் காண முடிந்தது. காரணம் அதில் சொல்லப்பட்டது அனைத்தும் அவதூறு மற்றும் உண்மையில்லாததாகும். அதிலிருந்து நாம் தேசப்பற்றைக் காணலாம்'' என்று அவர் கூறினார்.
சரவா, சிபுவில் நடைபெற்ற மலேசிய தின கொண்டாத்தில் கலந்து கொண்ட டத்தோ சுரியானி இதனைத் தெரிவித்தார்.
மலேசிய செய்தி நிறுவனம், பெர்னமா மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் ஒத்துழைப்பில், கே.கே.எம்.எம் ஏற்பாடு செய்த ‘RUKUN NEGARA HOUR’ என்ற சிறப்பு நிகழ்ச்சியின் ஒரு அங்கமாக இந்த நேர்காணல் அமைந்தது.
ரூக்கூன் நெகாராவின் ஐம்பதாவது ஆண்டு நிறைவு நாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சி , இன்று காலை 9 மணிக்கு, பெர்னாமா தொலைக்காட்சியிலும் வானொலியிலும் நேரலையாக ஒளிப்பரப்பட்டது.
--பெர்னாமா
© 2024 BERNAMA • உரிமைத் துறப்பு • தனியுரிமைக் கொள்கை • பாதுகாப்பு கொள்கை