விளையாட்டு

தோமஸ் கிண்ண பூப்பந்து போட்டிக்கு தயாராகும் கிசோனா

15/09/2020 07:10 PM

கோலாலம்பூர், 15 செப்டம்பர் (பெர்னாமா) -- நீண்ட காலமாக எந்தவொரு போட்டிகளிலும் கலந்து கொள்ளாத நிலையில், நாளை தொடங்கவிருக்கும் PRESIDENT கிண்ண பூப்பந்து போட்டியில் தமது ஆற்றலை மீண்டும் பரிசோதிக்கவிருப்பதாக நாட்டின் தேசிய மகளிர் ஒற்றையர் பூப்பந்து விளையாட்டாளர் எஸ்.கிசோனா தெரிவித்திருக்கிறார்.

காயத்திலிருந்து மீண்டிருப்பதால், இப்போட்டியில் கவனம் செலுத்தி தமது ஆட்டத்திறனை மேம்படுத்தி கொள்ளவிருப்பதாக அவர் கூறுகிறார்.

அரசாங்கத்தால் அமல்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவிற்குப் பிறகு கலந்து கொள்ளவிருக்கும் முதல் போட்டியாக, PRESIDENT கிண்ணப் போட்டி அமைந்திருப்பதால், தோமஸ் மற்றும் உபெர் கிண்ண போட்டியில் விளையாடுவதற்கு தம்மை தயார்ப்படுத்தி கொள்ள இது உதவியாக இருக்கும் என்று கிசோனா தெரிவித்தார். 

தேர்வு விளையாட்டாளராக மட்டுமே, பிலிப்பைன்ஸ் சீ விளையாட்டுப் போட்டியில் களமிறக்கப்பட்டாலும், நாட்டிற்கு தங்க பதக்கத்தை வென்று எஸ்.கிசோனா அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதனிடையே, அக்டோபர் 3-ஆம் முதல் 11-ஆம் தேதி வரை டென்மார்க்கில் நடைபெறவிருந்த 2020 தோமஸ் மற்றும் உபெர் கிண்ண பூப்பந்து போட்டி ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக உலக பூப்பந்து சம்மேளனம் அறிவித்திருக்கிறது. 

இப்போட்டிக்கான புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும். 

-- பெர்னாமா