அமெரிக்கா, 20 பிப்ரவரி (பெர்னாமா) -- காசாவில், இஸ்ரேலிய தாக்குதலால் சேதமடைந்த காற்பந்து அரங்கங்கள் மற்றும் வசதிகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான 7 கோடியே 50 லட்சம் அமெரிக்க டாலர் நிதியை அனைத்துலக காற்பந்து சம்மேளனம், ஃபிஃபா நிர்வகிக்கவுள்ளது.
அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப், இந்த அறிவிப்பை, நேற்று வாஷிங்டனில் நடைபெற்ற பாதுகாப்பு வாரியத்தின் முதல் கூட்டத்தில் வெளியிட்டார்.
காசாவின் காற்பந்து திட்டத்திற்காக, ஃபிஃபா 7 கோடியே 50 லட்சம் அமெரிக்க டாலரை திரட்ட உதவும் என்று டோனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்
இந்த மேம்பாட்டுத் திட்டத்தில் ஒரு காற்பந்து கழகம், 20,000 இருக்கைகள் கொண்ட ஒரு தேசிய மைதானம் மற்றும் ஒரு கால்பந்து மைதானம் ஆகியவற்றைக் கட்டுவது அடங்கும் என்று அறிவித்தார்.
இந்த மேம்பாட்டு திட்டத்தில் காற்பந்து கழகம் அமைப்பது, 20 ஆயிரம் பேர் அமரும் தேசிய அரங்கம் கட்டுவது மற்றும் காற்பந்து மைதானங்கள் உருவாக்குவது ஆகியவை அடங்கும் என்று ஃபிஃபா தலைவர் கியானி இன்பான்டினோ கூறினார்.
இருப்பினும், அதே நாளில் வெளியிடப்பட்ட ஃபிஃபா அறிக்கையில், டிரம்ப் அறிவித்த 7 கோடியே 50 லட்சம் அமெரிக்க டாலர் தொகை குறித்து குறிப்பிடப்படவில்லை.
அதற்கு பதிலாக, இந்த நிதி அனைத்துலக தலைவர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து திரட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)