ஜோகூர் பாரு, 13 பிப்ரவரி (பெர்னாமா) -- இம்மாதத் தொடக்கத்தில், வெளிநாட்டுப் பெண் ஒருவரைப் பாலியல் பலாத்காரம் புரியும் நோக்கத்துடன் வன்முறையைக் கையாண்டதாக, இன்று ஜோகூர் பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ஆசிரியர் ஒருவர் மறுத்துள்ளார்.
மாஜிஸ்திரேட் A. ஷார்மினி முன்னிலையில் அக்குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டப் பின்னர் குற்றம் சுமத்தப்பட்ட எல்வின் சோ சே ஹொங் அவ்வாறு கூறினார்.
கடந்த பிப்ரவரி முதலாம் தேதி மாலை மணி 5.30-இல் இருந்து ஆறுக்குள் Perodua Bezza ரகக் கார் ஒன்றினுள் அவர் இக்குற்றத்தைப் புரிந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குற்றஞ்சாட்டப்பட்டவர், 2,000 ரிங்கிட் ஜாமின் மற்றும் தனிநபர் ஒருவரின் உத்தரவாதத்தின் பேரில் விடுவிக்கப்பட்ட வேளையில், இவ்வழக்கின் மறுசெவிமடுப்பு வரும் மார்ச் 13-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், பத்தாண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது பிரம்படி அல்லது அவற்றில் இரு தண்டனைகளை விதிக்க வகைச் செய்யும் குற்றவியல் சட்டம் செக்ஷன் 354-இன் கீழ் அவர்மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)