குவாந்தான், 11 பிப்ரவரி (பெர்னாமா) -- கிழக்குக்கரை ரயில் பாதைத் திட்டம், ஈ.சி.ஆர்.எல் வழித்தடம் முழுவதும் Maxis நிறுவனத்தை 4G மற்றும் 5G சேவையின் தொடர்பு உள்கட்டமைப்பு வழங்குநராக மலேசிய ரேல் லிங்க் நிறுவனம் நியமித்துள்ளது.
தொடர்பு உள்கட்டமைப்பு பயன்பாட்டை மேம்படுத்துவது மட்டுமின்றி, சேவை வழங்குநர்கள் பயனர்களின் அனுபவத்தையும் மக்களுக்கான சேவைத் தரத்தையும் மேம்படுத்துவதில் இந்த அணுகுமுறை கவனம் செலுத்தும் என்று தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.
இன்று, குவாந்தான், கோத்தா எஸ்.ஏ.எஸ் நிலையத்தில் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தொடக்கி வைத்த ஈ.சி.ஆர்.எல் திட்டத்திற்கான மின்சார ரயில் பெட்டிகள், ஈ.எம்.யூ மற்றும் மின்சார ரயில் இயந்திரத்தின் வருகை நிகழ்ச்சியில் உரையாற்றிய போது டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் இத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
இதனிடையே, உள்கட்டமைப்பு பகிர்வு கொள்கையின் அடிப்படையில், நாட்டின் ஐந்து முக்கிய தொலைப்பேசி சேவையை உட்படுத்திய ஒரு கூட்டு அணுகுமுறையை மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம், எம்.சி.எம்.சி உடன் இணைந்து தமது தரப்பு மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இது தொலைத்தொடர்பு துறையின் சேவை மற்றும் முதலீட்டு செயல்திறனை மேம்படுத்தும் என்றும் ஃபஹ்மி கூறினார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]