Ad Banner
 பொது

சமூகப் பயணக் கடப்பிதழை தவறாகப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

07/02/2026 06:32 PM

அலோர் ஸ்டார், 07 பிப்ரவரி (பெர்னாமா) -- நாட்டில், சமூக பயண கடப்பிதழை தவறாகப் பயன்படுத்தும் வெளிநாட்டு பிரஜைகளின் செயல், குறிப்பிட்டத்தக்க அளவில் இல்லாவிட்டாலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிகமாக பதிவுச் செய்யப்பட்டுள்ளது.

மேலும், நாட்டில் வேலை செய்யும் அல்லது வணிகம் நடத்தும் வெளிநாட்டு பிரஜைகள் மத்தியில் மேற்கொள்ளப்படும் பல்வேறு குற்றங்களை மலேசிய குடிநுழைவு துறை கண்டறிந்துள்ளதாக, உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் கூறினார்.

''உதாரணமாக, அவர் சமூக பயண கடப்பிதழ் வழி நுழைந்தால், அவர் வணிகம் செய்ய முடியாது. நாமும் சிங்கப்பூர், ரஷ்யா சென்றால், அங்கு அவர்கள் ஒரு தகவல் குறிப்பை வைத்திருப்பர். வணிகம் செய்யத் தடை. ஒரே மாதிரிதான். தற்போதுள்ள பிரச்சனை என்னவென்றால், சிலர் சமூக பயண கடப்பிதழ் வழி நுழைந்துள்ளனர். பிறகு வணிகம் செய்கின்றனர்,'' என்றார் அவர்.

சுற்றுப்பயணிகளாக மலேசியாவிற்கு வரும் வெளிநாட்டவர்கள், தளவாடப் பொருள்கள் அல்லது அலங்கரிப்பு பொருள்களை வாங்குகின்றனர்.

பின்னர், அவர்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்புவதற்கு முன்னதாக, அதனை குறைந்த விலையில், விற்பனை செய்வதால், அதன் மூலம் உள்ளூர் வர்த்தக சந்தை பாதிக்கப்படுவதாக, சைஃபுடின் மேலும் விவரித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)