Ad Banner
Ad Banner
 பொது

எஸ்.எஸ்.டி வரி அமைப்பை நிலைநிறுத்த  அரசாங்கம் முடிவு

09/12/2025 05:12 PM

கோலாலம்பூர், 09 டிசம்பர் (பெர்னாமா) -- மிகவும் திறமையான மற்றும் பயனுள்ள வரிவிதிப்பு முறையை உறுதி செய்வதற்காக மேம்பாடுகளைச் செயல்படுத்தும் அதேவேளையில், தற்போதுள்ள விற்பனை மற்றும் சேவை வரி, எஸ்.எஸ்.டி கட்டமைப்பை நிலைநிறுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

மக்களால் பொதுவாக  பயன்படுத்தப்படும் அடிப்படை பொருட்கள் மற்றும் சேவை மீது இந்த வரி விதிக்கப்படுவதில்லை என்பதால் இந்நடவடிக்கை இலக்கிடப்பட்ட முறையில் பயனீட்டாளர்களின் வரிகளைப் பராமரிப்பதற்கான அரசாங்கத்தின் அணுகுமுறையாகும் என்று  நிதி துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் தெரிவித்தார்.

எஸ்.எஸ்.டி, மலேசியாவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயன்படுத்தப்பட்டு வரும், இலக்கிடப்பட்ட வரிவிதிப்பு முறையாகும் என்றும், இது தொழில்துறை, வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களால் புரிந்து கொள்ளப்பட்ட ஓர் அமைப்பு என்றும் லிம் ஹுய் யிங் விளக்கினார்.

''எஸ்.எஸ்.டி-யை செயல்படுத்துவது அரசாங்கத்திற்கு விரைவான நிதி தாக்கத்தையும் அளிக்கும்,'' என்றார் அவர். 

நாட்டின் வரிவிதிப்பு முறை நிலையாக இருப்பதை உறுதி செய்வதற்கு, பொருள் மற்றும் சேவை வரி, ஜி.எஸ்.டி-யை மீண்டும் அமல்படுத்துவது அல்லது எஸ்.எஸ்.டி முறையை மேம்படுத்தும் அரசாங்கத்தின் அணுகுமுறை குறித்து செனட்டர் டத்தோ சி. சிவராஜ் எழுப்பிய கேள்விக்கு லிம் அவ்வாறு கூறினார்.

பெரும்பாளான மக்களின் வருமானம் இன்னும் குறைவாக இருப்பதால் ஜி.எஸ்.டி-யை அமல்படுத்த அரசாங்கம் இன்னும் திட்டமிடவில்லை என்று அவர் மேலும் குறிப்பிட்டார். 

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]