கோலாலம்பூர், 13 நவம்பர் (பெர்னாமா) -- பெர்னாமா செய்தி நிறுவனத்தின் முதன்மை செய்தி ஆசிரியர் எஸ்.சிவசெல்வம் உடல்நலக் குறைவால் தமது 77-வது வயதில், இன்று காலமானார்.
கோலாலம்பூர், செராஸில் உள்ள அவரது வீட்டில் அதிகாலை 3 மணிக்கு இயற்கை ஏய்தியதை, தமது மனைவி லலிதா எஸ்.நடராஜன் உறுதிப்படுத்தினார்.
இதனிடையே, அன்னாரின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டு சிலாங்கூர், பெட்டாலிங் ஜெயாவில் உள்ள கம்போங் துங்கு மயானத்தில் தகனம் செய்யப்படும் என்று பெர்னாமாவின் முன்னாள் ஊழியருமான லலிதா கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)