ஒட்டாவா, 20 ஜூன் (பெர்னாமா) -- வரும் ஜூலை 21-ஆம் தேதிக்குள் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைக்கான இறுதி முடிவு எட்டப்படாவிட்டால் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எஃகு மற்றும் அலுமினியத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட வரி அதிகரிப்பு மேற்கொள்ளப்படும் என்று கனடா கூறியது.
வரி விகித ஒதுக்கீட்டு முறை உட்பட புதியதொரு திட்டத்தை கனடிய மத்திய அரசாங்கம் செயல்படுத்தும் என்று அந்நாட்டு பிரதமர் மார்க் கார்னி தெரிவித்தார்.
''உள்நாட்டில் நமது பலத்தை வலுப்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும், தற்போது நிலவும் அமெரிக்காவின் நியாயமற்ற வரிகளிலிருந்து கனடியத் தொழிலாளர்கள் மற்றும் வணிகங்களைப் பாதுகாக்க வேண்டும். அதனால்தான், கனடிய எஃகு மற்றும் அலுமினியத் தொழிலாளர்கள் உட்பட உற்பத்தியாளர்களைப் பாதுகாக்க கனடா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தும் என்று நாங்கள் அறிவிக்கிறோம்,'' என்றார் அவர்.
கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தங்களைக் கொண்ட நாடுகளிலிருந்து குறிப்பிட்ட அளவிலான எஃகு இறக்குமதியை இந்த அமைப்பு அனுமதிப்பதாக மார்க் கார்னி கூறினார்.
எனினும், குறிப்பிட்ட வரம்பை மீறும் எந்தவோர் இறக்குமதியும் அதிக வரிகளுக்கு உட்பட்டது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]