Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

10% பணியாளர்களைக் குறைக்கவுள்ளது பெட்ரோனாஸ்

06/06/2025 03:57 PM

கோலாலம்பூர், 06 ஜூன் (பெர்னாமா) - சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு மற்றும், கடினமான செயல்பாட்டு சவால்கள் ஆகிய காரணங்களால் தனது பணியாளர்களை 10 விழுக்காடு குறைக்கவுள்ளதாக பெட்ரோலியம் நேஷனல்   நிறுவனமான பெட்ரோனாஸ் அறிவித்திருக்கிறது.

இம்முடிவால் பெட்ரோனாசை சேர்ந்த சுமார் ஐயாயிரம் பேர் பணி நீக்கம் செய்யப்படலாம் என்று அதன் தலைவரும் குழும தலைமை நிர்வாக அதிகாரியுமான டான் ஶ்ரீ தெங்கு முஹமட் தௌஃபிக் தெங்கு அசிஸ் தெரிவித்தார்.

பணி நீக்கத்தில் உட்படுத்தப்பட்டுவர்கள் அடுத்த ஆண்டு தொடக்கத்திலிருந்து படிப்படியாக அறிவிக்கப்படுவர் என்றும் அவர் கூறினார்.

நிறுவனத்தின் மறுசீரமைப்புக்காக அனைத்து பதவி உயர்வுகளும் புதிய பணியமர்த்தல்களும் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை முடக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் பெட்ரோனாஸ் 2.0, மாறுபட்ட முறையில் நிர்வகிக்கப்படும் என்று நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.

மாறுபட்ட செயல்முறையைக் கொண்டிருக்கும் இத்திட்டத்தில், தனது இலக்கை அடையும் வகையில், பணி செயலாக்கத்தை பெட்ரோனாஸ் நெறிப்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

எண்ணெய் விலைகள் பீப்பாய்க்கு  100 அமெரிக்க டாலர் என்று  உச்சத்தை எட்டியிருக்கும் நிலையில், சிறிய குழுவுடன் விவேகத்துடன் செயல்படவிருப்பதாக தெங்கு முஹமட் தௌஃபிக்  கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)