கோலாலம்பூர், 05 ஜூன் (பெர்னாமா) -- ஜூன் மூன்று தொடங்கி நவம்பர் 30-ஆம் தேதி வரையில் Sungai Besi நெடுஞ்சாலை, பெஸ்ராயா நெடுகிலும் அட்டவணையிடப்பட்ட பராமரிப்புப் பணிகளை அந்நெடுஞ்சாலை நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது.
எனவே, 0.1-வது கிலோமீட்டரில் இருந்து 21.9-வது கிலோமீட்டர் வரை, 0.0 KMB-இல் இருந்து 0.8 KMB வரை, 0.0 KMS-இல் இருந்து 2.2 KMS வரை மற்றும் 0.0 KMP-இல் இருந்து 3.3 KMP வரையில், இரு திசைகளிலும் கட்டம் கட்டமாக வழித்தடங்கள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சாலை பழுதுபார்ப்பு பணிகள் மற்றும் சாலை அடையாளப் பலகைகள் உள்ளடக்கிய பராமரிப்பு பணிகள் இரவில் மட்டுமே மேற்கொள்ளப்படும் என்று இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் அந்நெடுஞ்சாலை குத்தகை நிறுவனம் தெரிவித்தது.
அதாவது, அக்காலக்கட்டம் முழுவதும் தினசரி இரவு மணி 10 தொடங்கி காலை மணி ஆறு வரை மேற்கொள்ளப்படும்.
இதில் சம்பந்தப்பட்ட பகுதிகளில் போக்குவரத்து மற்றும் சாலை மூடப்படும் தகவல்களும் மின்னணு அறிவிப்புப் பலகைகள் மூலம் பொதுமக்களுக்குத் தொடர்ந்து தெரிவிக்கப்படுவது உறுதி செய்யப்படும் என்று பெஸ்ராயா கூறியது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)