Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

நெரிசல் மிகுந்த 121 பள்ளிகளில் மேம்பாட்டுப் பணிகள் - கல்வியமைச்சு அறிவிப்பு

05/06/2025 05:48 PM

கோலாலம்பூர், 05 ஜூன் (பெர்னாமா) - கூடுதல் வகுப்பறைகள், உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தேவையான உபகரணங்களையும் பெறுவதற்கு நாடு தழுவிய அளவில் ஏழு மாநிலங்களை உட்படுத்தி நெரிசல் மிகுந்த 121 பள்ளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இத்திட்டத்திற்காக எட்டு கோடியே 80 லட்சம் ரிங்கிட் நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது.

பிரதான பள்ளிகள் மற்றும் ஒருங்கிணைந்த சிறப்பு கல்வித் திட்டத்தை உட்படுத்தி இந்த மேம்பாடுகள் இடம்பெற்றிருக்கும்.

கட்டுமான செயல்முறையை விரைவுப்படுத்துவதற்காக தொழில்மயமாக்கப்பட்ட கட்டிட அமைப்பு IBS முறை பயன்படுத்தப்படுவதால், இவ்வாண்டுக்குள் அவ்வேலைகள் முழுமைப் பெறும்.

உயர் ரக பள்ளிகளின் தர மேம்பாட்டுத் திட்டத்திற்கான ஒப்புதல் கடிதம் SST-ஐ, பொதுப்பணி துணையமைச்சர் டத்தோ ஶ்ரீ அஹ்மட் மஸ்லான் இன்று நிறைவு செய்ததாக கல்வியமைச்சு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

சிலாங்கூரில் மொத்தம் 103 பள்ளிகள் இத்திட்டத்தில் இணைக்கப்படும் என்பதால், அதிக எண்ணிக்கையிலான ஈடுபாட்டைக் கொண்ட மாநிலமாக அது கருதப்படுகிறது.

இதைத் தொடர்ந்து பேராக்கில் எட்டு பள்ளிகள், பகாங்கில் நான்கு, நெகிரி செம்பிலானில் மூன்று, திரெங்கானு, கோலாலம்பூர், பினாங்கு ஆகியவற்றில் தலா ஒரு பள்ளி என்று பதிவாகியுள்ளது.

அதிக மாணவர்களைக் கொண்ட பள்ளிகளில் உள்ள பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கும், அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஊழியர்களுக்கு உகந்த கல்விச் சூழலை அணுகுவதை உறுதி செய்வதற்கும் இந்நடவடிக்கை ஒரு பயனுள்ள குறுகிய கால தீர்வாகும்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)