கராய்ச்சி, 03 ஜூன் (பெர்னாமா) -- பாகிஸ்தானின் தெற்கு துறைமுக நகரமான கராய்ச்சியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து அங்கே உள்ள சிறைச்சாலையின் சுவர்கள் மற்றும் கதவுகள் சேதமடைந்தன.
அதனை வாய்ப்பாக பயன்படுத்தி, அச்சிறையில் இருந்த 200-க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பிச் சென்றதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நிலநடுத்தினால் ஏற்பட்ட பதற்றத்தினால் அவர்கள் தப்பிச் சென்றதாக சிறைச்சாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தப்பிச் சென்றவர்களில் 46 பேர் மீண்டும் கைது செய்யப்பட்டனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)