லண்டன், 03 ஜூன் (பெர்னாமா) -- உலக ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்கல்வி மற்றும் தொழில்பயிற்சி டிவெட் மையங்களை உருவாக்க, பிரிட்டன் உட்பட அனைத்துலக கல்வி மற்றும் தொழில்துறை நிறுவனங்களுடன் மலேசியா வியூக ஒத்துழைப்பை மேற்கொள்ளும்.
ஆசியான் வட்டாரத்திற்கான திறன் மிக்க டிவெட் பயிற்சி மையத்தை மலேசியா கொண்டிருப்பதை உறுதி செய்வதே, அரசாங்கத்தின் நோக்கமாகும் என்று துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார்.
இந்நோக்கத்திற்காக, டிவெட் மேம்பாட்டில் வட்டார ஒத்துழைப்பு மேற்கொள்ள, வேலை வாய்ப்புகளுக்கு பொறுப்பான ஆசியான் அமைச்சர்களுடன் தாம் கலந்துரையாடியதாக டாக்டர் அஹ்மாட் கூறினார்.
"இது வெறும் அங்கீகாரம் மட்டுமல்ல. மலேசிய மாணவர்கள் திவெட் நிறுவனங்களில் படிப்பதற்கான வாய்ப்புகளைக் குறைக்காமல், ஆசியான் நாடுகளைச் சேர்ந்த மாணவர்களை மலேசியாவில் உள்ள திவெட் நிறுவனங்களில் கல்வி கற்க ஈர்க்கவும் நாங்கள் விரும்புகிறோம்," என்றார் அவர்.
திங்கட்கிழமை, லண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் டிவெட்குறித்து உரையாற்றிய பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
உலகத் தரம் வாய்ந்த டிவெட் மாணவர்களை உருவாக்குவதில் மலேசியா உலக டிவெட் தளமாக உருமாறத் தயாராக இருப்பதை அவர் தமது உரையில் சுட்டிக் காட்டினார்.
நான்கு நாள்கள் அலுவல் பயணம் மேற்கொண்டு, அஹ்மாட் சாஹிட் பிரிட்டன் சென்றுள்ளார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)