Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

சஃப்ருலின் கட்சி விலகல் அவரின் பதவியைப் பாதிக்காது

01/06/2025 05:42 PM

கோலாலம்பூர், 01 ஜூன் (பெர்னாமா) - அம்னோ உச்சமன்ற உறுப்பினர் தெங்கு டத்தோ ஶ்ரீ சஃப்ருல் தெங்கு அப்துல் அசிஸ் அக்கட்சியில் இருந்து விலகும் முடிவு அமைச்சரவையில் அவரின் பதவியைப் பாதிக்காது.

முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சராகதெங்கு டத்தோ ஶ்ரீ சஃப்ருல் தனது கடமைகளை சிறப்பாகச் செய்துள்ளதை பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம்  சுட்டிக்காட்டினார்.

"நூற்றுக்கணக்கான கோடி மதிப்புள்ள எங்கள் முதலீடுகள் அவர், மாட்ரேட், மிடி மற்றும் அரசாங்கத்தின் முயற்சிகள் மூலம் நிர்வகிக்கப்படுகின்றன. இப்போது அவர் விண்ணப்பிக்கத் தேர்ந்தெடுத்துள்ளார். நாங்கள் இன்னும் எதையும் கலந்துரையாடவில்லை. அவர் ஹஜ் யாத்திரையை நிறைவேற்றட்டும். அதனால் அது இருக்கட்டும். அது அதிக சிரமமாக இருக்காது,'' என்றார் அவர்.

அம்னோவில் தனது அனைத்துப் பதவிகளிலும் இருந்து விலகுவதாகவும், கெஅடிலான் கட்சியில் இணைவதற்கான விருப்பத்தையும் கடந்த வெள்ளிக்கிழமை தெங்கு டத்தோ ஶ்ரீ சஃப்ருல் அறிவித்தார்.

எனவே, கெஅடிலான் கட்சி தலைவருமான டத்தோ ஸ்ரீ அன்வார், இந்த முடிவை மதிப்பதாகவும், இவ்விவகாரம் குறித்து அரசாங்கத்தில் உள்ள கட்சி பங்காளிகளுடன் கலந்துரையாடுவதாகவும் கூறினார்.

"ஒருவர் முடிவெடுத்தால், அவரின் முடிவை நாங்கள் மதிக்கிறோம். ஆனால், கெஅடிலான் சார்பாக, நிச்சயமாக நாங்கள் எங்கள் நண்பர்களுடன் கலந்துரையாடி, எது சிறந்தது என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டும். எனினும், அமைச்சரின் பதவி பாதிக்கப்படாது. முதலீட்டு அமைச்சராக அவரின் அடைவுநிலை சிறப்பாக இருப்பதாலும், நாட்டிற்கு அவரின் பங்களிப்புகள் தேவை என்பதாலும், அவர் தனது பணியில் தொடர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்,'' என்று பிரதமர் அன்வார் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)