கோலாலம்பூர், 01 ஜூன் (பெர்னாமா) - நாட்டின் வாசிப்பு கலாச்சாரம் இன்னும் நடைமுறையில் இல்லாததால் அனைத்து நிலையிலான மக்களுக்கும் அக்கலாச்சாரத்தை தொடர்ந்து ஊக்குவிக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.
இது நம்பிக்கையையும் அறிவு மீதான ஆர்வத்தையும் வலியுறுத்தும் மடானி அரசாங்கத்தின் விரும்பங்களுக்கு முரணானது என்று அவர் தெரிவித்தார்.
"நமது நாட்டில் வாசிப்பு ஒரு கலாச்சாரமாக மாறவில்லை. இது எனக்கு அதிருப்தியாக உள்ளது. நாம் இதை மடானி நாடு என்று அழைக்கும் போது நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட மற்றும் அறிவை விரும்பும் நாடு. சொற்பொழிவுகள் கேட்பதன் மூலமும் கருத்துகளை வெளியிடுவதன் மூலமும் நாம் எப்படி அறிவை நேசிக்க முடியும். சில நேரங்களில் திட்டுவது உண்டு. ஆனால், அறிவை அடிப்படையாகக் கொண்டு அல்ல," என்றார் அவர்.
இன்று கோலாலம்பூரில், அனைத்துலக வாணிப மையத்தில் நடைபெறும் 2025ஆம் ஆண்டுக்கான கோலாலம்பூர் அனைத்துலகப் புத்தகக் கண்காட்சி, PBAKL-இன் நிறைவு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போது டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அவ்வாறு கூறினார்.
கடந்த மே 23ஆம் தேதி தொடங்கிய PBAKL 2025 கன்காட்சியில் 18 லட்சம் பேர் வருகை புரிந்திருப்பதால், இந்த வாசிக்கும் கலாச்சாரத்தை வளர்க்க முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)