தோக்கியோ, 31 மே (பெர்னாமா) -- மலேசிய தேசிய செய்தி நிறுவனம், பெர்னாமா மற்றும் இந்தோனேசிய செய்தி நிறுவனம், அந்தாரா ஆகிய இரண்டிற்கும் இடையிலான நெருங்கிய உறவு, வலுவான ஒத்துழைப்பின் மூலம் மேம்படுத்தப்படும்.
செய்திகள் வழங்குவதில் பெர்னாமாவும், அந்தாராவும் தங்களின் உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள
இந்தோனேசிய தொடர்பு மற்றும் இலக்கவியல் அமைச்சர் மியூத்யா வியாடா ஹஃபித்துடனான இருவழி கலந்துரையாடலின் போது இருவரும் ஒப்புக் கொண்டதாக தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி பட்சில் கூறினார்.
இவ்விரு நிறுவனங்களும் தங்களின் நாடுகளில் மக்களுக்குத் துல்லியமான மற்றும் சமநிலையான தகவல்களை வழங்குவதோடு, தகுந்த, நம்பகத்தன்மையான மற்றும் திறன் கொண்டதாக இருப்பதை உறுதி செய்ய இருவழி உறவை வலுப்படுத்துவது முக்கியம் என்று டத்தோ ஃபஹ்மி தெரிவித்தார்.
அந்நாட்டின் சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்துவது உட்பட மேலும் பல விவகாரங்களில் மலேசியா இந்தோனேசியாவிற்கு உதவிகளை வழங்கும் என்று அவர் கூறினார்.
"இரு நாடுகளுக்கும் நன்கு அறியப்பட்ட மற்றும் மிக முக்கியமான செய்தி நிறுவனங்களான பெர்னாமாவிற்கும் அந்தாராவிற்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்கான எங்கள் முயற்சிகள் குறித்து அமைச்சர் மியூத்யாவுடன் கலந்துரையாடல் நடந்தன. மலேசிய-இந்தோனேசிய பத்திரிகையாளர் ஒற்றுமை சங்கம், ISWAMI மூலம் உறவுகளை மேம்படுத்துவதே நாம் செய்யக்கூடியது ஆகும். இது மலேசிய மற்றும் இந்தோனேசிய ஊடக அமைப்புகளுக்கு இடையே நெருக்கமான உறவுகளை ஏற்படுத்தும்", என்றார் அவர்.
இன்று, ஜப்பான், தோக்கியோவில் நடைபெற்ற 2025-ஆம் ஆண்டு ஆசிய-பசிபிக் தொலைத்தொடர்பு அமைச்சர்கள் கூட்டம், APT-MM 2025-இல் கலந்து கொண்டபோது அவர் பெர்னாமாவிடம் அதனை கூறினார்.
தற்போது, வட்டார ரீதியில் அதிகரித்து வரும் சவால்கள் மற்றும் ஒன்றோடு ஒன்று சார்ந்துள்ள தகவல் சூழல், குறிப்பாக, தகவல் தொடர்பு, ஊடகம் மற்றும் இலக்கவியல் உள்கட்டமைப்பு ஆகியவற்றில் இருதரப்பு ஒத்துழைப்பின் பல்வேறு முக்கிய அம்சங்களும் இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதாக, டத்தோ ஃபஹ்மி விவரித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)