Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

சாலை விபத்தில் மூவர் பலி

30/05/2025 05:08 PM

கோலா கிராய், 30 மே (பெர்னாமா) -- இன்று காலை கிளந்தான் கோலா கிராய் - குவா மூசாங் சாலையில் விரைவுப் பேருந்து மற்றும் காரை உட்படுத்திய விபத்தில் மூவர் உயிரிழந்தனர்.

இவ்விபத்து குறித்து காலை மணி 11.20-க்கு அழைப்பு கிடைத்ததாக கிளந்தான் மாநில மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை பேச்சாளர் ஒருவர் கூறினார்.

பெரோடுவா மைவி ரக காரும் விரைவு பேருந்தும் மோதிக்கொண்டதை சம்பவ இடத்திற்கு சென்றடைந்தபோது கண்டறியப்பட்டதாக இன்று வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காரில் அகப்பட்டுக் கொண்ட ஆடவர் ஒருவரும் பெண்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேல் நடவடிக்கைக்காக அவர்களின் சடலங்கள் போலீசிடம் ஒப்படைக்கப்பட்டன.

சிறு காயங்களுடன் உயிர் தப்பிய பேருந்து ஓட்டுநர் சிறப்பு கருவிகள் கொண்டு மீட்கப்பட்டார்.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]