சிப்பாங் , 28 மே (பெர்னாமா) -- கோலாலம்பூரில் நடைபெற்ற முதல் ஆசியான் - ஐ.சி.சி சீனா உச்சநிலை மாநாட்டில் கலந்து கொண்ட, சீனப் பிரதமர் லீ கியாங் இன்று தாயகம் திரும்பினார்.
இன்று காலை 9.15 மணியளவில் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் பூங்கா ராயா வளாகத்தில் இருந்து லீ கியாங் மற்றும் பேராளர்கள் பயணிக்கும் விமானம் புறப்பட்டது.
முன்னதாக, கேப்டன் முஹ்மட் ஷாரின் முஹ்மட் யூசோப் லைமையிலான அரச மலேசிய இராணுவப் படையின் முதல் Batalion-இன் 28 அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்களின் மரியாதை அணிவகுப்பை லீ கியாங் பார்வையிட்டார்.
போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக், லீ கியாங் மற்றும் பேராளர்களை வழியனுப்பி வைத்தார்.
ஆசியான், வளைகுடா ஒத்துழைப்பு மன்றம், GCC உச்சநிலை மாநாட்டில் சீனா கலந்து கொண்டது, தென்கிழக்கு ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுடனான வியூக உறவுகளை வலுப்படுத்துவதில் சீனாவின் உறுதிப்பாட்டை காட்டுகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ) 502