பொது

சிறந்த முறையில் பணியாற்றுவேன் - அசாம் பாக்கி

10/05/2024 08:00 PM

புத்ராஜெயா, 10 மே (பெர்னாமா) --  மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், எஸ்.பி.ஆர்.எம்.-இன் தலைமை ஆணையராக மீண்டும் நியமிக்கப்பட்டிருக்கும் டான் ஸ்ரீ அசாம் பாக்கி, முழு நம்பிக்கையுடன் தனது பொறுப்புகளை நிறைவேற்ற உறுதி பூண்டுள்ளார்.

இப்பதவிக்கு தம்மை மீண்டும் நியமிக்க ஒப்புதல் வழங்கியிருக்கும் மாமன்னர் சுல்தான் இப்ராயிமுக்கு அசாம் பாக்கி நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

"சம்பந்தப்பட்ட பொறுப்புகளை முழு நேர்மையுடன் நிறைவேற்றுவதையும் நான் தொடர்ந்து உறுதி செய்வேன்," என்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட ஓர் அறிக்கையில் அவர் தெரிவித்தார்.

சமரசமின்றி ஊழலை எதிர்த்துப் போராட மக்கள் அனைவரும் எஸ்.பி.ஆர்.எம்-உடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று அசாம் கேட்டுக் கொண்டார்.

அடுத்த ஒரு வருடத்திற்கு, அசாம் பாக்கி எஸ்.பி.ஆர்.எம்.-இன்  தலைமை ஆணையராக பணியாற்றுவார் என்று தேசிய தலைமை செயலாளர் டான் ஶ்ரீ முஹமாட் சுக்கி அலி இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையின் வழி தெரிவித்தார்.

2020-ஆம் ஆண்டு மார்ச் 9-ஆம் தேதி அசாம் பாக்கி, எஸ்.பி.ஆர்.எம்.-இன் தலைமை ஆணையராக நியமிக்கப்பட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)