பொது

கோல குபு பாரு இடைத்தேர்தல்; நான்கு முனைப் போட்டி

27/04/2024 03:27 PM

கோல குபு பாரு, 27 ஏப்ரல் (பெர்னாமா) -- கோல குபு பாரு சட்டமன்ற இடைத்தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவுகிறது.

நம்பிக்கை கூட்டணி, பெரிக்காத்தான் நேஷனல், ரக்யாட் மலேசியா கட்சி மற்றும் சுயேட்சையாக ஒருவர் என்று நான்கு வேட்பாளர்கள் இத்தேர்தலில் களம் இறங்கியிருக்கின்றனர்.

இன்று காலை பத்து மணி வரையில் வேட்புமனு தாக்கல் நடைபெற்ற நிலையில், நான்கு வேட்பாளர்களும் தங்களது வேட்புமனுவைத் தாக்கல் செய்தனர்.

அதன் பின்னர், வேட்பாளர்களின் பெயர் பட்டியலை தேர்தல் நிர்வாக அதிகாரி யுஹானாஸ் அவுரி கமாருடின் அறிவித்தார்.

கடந்த மார்ச் 21 தேதி கோலா குபு பாரு சட்டமன்ற உறுப்பினராக இருந்த 58 வயதுடைய லீ கி ஹியோங் புற்றுநோயால் காலமானதைத் தொடர்ந்து அங்கு இடைத்தேர்தல் நடைபெறுகின்றது.

அதன் வாக்களிப்பு மே 11ஆம் தேதி நடைபெறும்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)