பொது

ஹெலிகாப்டர்கள் விபத்து; மாமன்னர் தம்பதியர் ஆழ்ந்த இரங்கல்

23/04/2024 03:09 PM

கோலாலம்பூர், 23 ஏப்ரல் (பெர்னாமா) -- பேராக், லூமுட்டில் நிகழ்ந்த அரச மலேசிய கடற்படை, தி.எல்.டி.எம்-இன் ஹெலிகாப்டர்கள் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ரஹிம் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார்.

இச்சம்பவம் தொடர்பில், முழுமையான தகவலைப் பெற, மலேசிய ராணுவப்படை,ஏ.டி.எம் விரிவான விசாரணையை மேற்கொள்ளுமாறு மாமன்னர் தமது முகநூல் பதிவில் வலியுறுத்தினார்.

அந்த துயரச் சம்பவத்தில் நாட்டின் வீரர்கள் பலியாகியிருப்பது மிகவும் வருத்தமளிப்பதாக மாமன்னரும் அவரது துணைவியார் பேரரசியார் ராஜா சாரித்தும் தங்களின் இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளனர்.

அடுத்த மாத தொடக்கத்தில் நடைபெறத் திட்டமிடப்பட்டிருந்த, தி.எல்.டி.எம்-இன் 90-ஆம் ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு, ஒத்திகையில் ஈடுபட்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)