புத்ராஜெயா, 23 ஆகஸ்ட் (பெர்னாமா) -- இன்று காலையில் தொடங்கிய, டத்தோ ஶ்ரீ நஜீப் சம்பந்தப்பட்ட SRC INTERNATIONAL நிறுவனத்தின் மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை செவிமடுப்பதில் இருந்து தலைமை நீதிபதி துன் தெங்கு மைமுன் துவான் மாட் விலக வேண்டும் என்று எதிர் தரப்பு விண்ணப்பித்தது.
ஆனால், அவ்வழக்கு விசாரணைக்கு தாம் தொடர்ந்து தலைமையேற்கவிருப்பதாக தெங்கு மைமுன் கூறினார்.
அவ்வழக்கு விசாரணையில் இருந்து அவர் விலக வேண்டும் என்று எதிர் தரப்பினர் இறுதி நேரத்தில் விண்ணப்பித்ததால், கூட்டரசு நீதிமன்றம் அதனை நிராகரித்தது.
சுமார் மூன்று மணி நேரம் ஒத்திவைக்கப்பட்ட அம்மேல்முறையீட்டு விசாரணை, பின்னர் இன்று பிற்பகலில் மீண்டும் தொடங்கப்பட்டு தீர்ப்பு நிலைநிறுத்தப்பட்டது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)
© 2024 BERNAMA • உரிமைத் துறப்பு • தனியுரிமைக் கொள்கை • பாதுகாப்பு கொள்கை