பொந்தியான், 17 ஆகஸ்ட் (பெர்னாமா) -- 15-வது பொதுத் தேர்தல் வரும் அக்டோபர் 8-ஆம் தேதி நடைபெறும் என்று கூறப்படுவது வதந்தி மட்டுமே என்று அம்னோ கூறுகிறது.
நடப்பு அரசாங்கத்தின் தவணைக் காலம் அடுத்த வருடம் நிறைவடையும் வேளையில், அடுத்த பொதுத் தேர்தலுக்கான தேதி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதை அம்னோ பொதுச் செயலாளர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் மஸ்லான் தெரிவித்தார்.
"இது வதந்தி மட்டுமே. 15-வது போதுத் தேர்தல் குறித்த வதந்தி ஒவ்வொரு வாரமும் கிடைத்து வருகிறது. இருப்பினும் பொதுத் தேர்தல் கூடிய விரைவில் நடத்தப்படும் என்று நான் கருதுகிறேன்," என்று அவர் கூறினார்.
இன்று, பொந்தியான் நாடாளுமன்ற அளவில் தேசியக் கொடியைப் பறக்கவிடும் நிகழ்ச்சியை தொடக்கி வைத்த பின்னர் அஹ்மாட் மஸ்லான் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)
© 2024 BERNAMA • உரிமைத் துறப்பு • தனியுரிமைக் கொள்கை • பாதுகாப்பு கொள்கை