கொவிட்19: 589 புதிய சம்பவங்களுடன் நான்கு புதிய நோய்த் தொற்றுகள் பதிவு

15/10/2020 08:03 PM

கோலாலம்பூர், அக்டோபர் 15 (பெர்னாமா) -- நாட்டில் இன்று 589 புதிய கொவிட்-19 சம்பவங்கள் பதிவு செய்யப் பட்டிருக்கும் நிலையில் நான்கு புதிய நோய்த் தொற்றுகளையும் சுகாதார அமைச்சு அடையாளம் கண்டிருக்கிறது.

இன்று பதிவு செய்யப்பட்ட 589 புதிய கொவிட்-19 சம்பவங்களில், 586 உள்நாட்டில் பரவியது என்றும், எஞ்சிய மூன்று சம்பவங்கள் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியவர்களை உட்படுத்தியது என்றும், சுகாதார தலைமை இயக்குநர் டான் ஶ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்திருக்கிறார்.

இன்று உள்நாட்டில் பரவிய 589 சம்பவங்களில் 453 மலேசியப் பிரஜையை உட்படுத்தியதாகும். எஞ்சிய 136 சம்பவங்கள் அந்நிய நாட்டவர் தொடர்புடையது என்று டாக்டர் நோர் ஹிஷாம் தெரிவித்தார்.

இன்று நாட்டில் பரவிய நான்கு புதிய நோய்த் தொற்றுகள், சபா, நெகிரி செம்பிலான் மற்றும் புத்ராஜெயா, பேரா, லாபுவான் ஆகிய மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இந்நோயினால், இன்று மூவர் மரணமடைந்திருப்பதைத் தொடர்ந்து நாட்டில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை, 170 ஆக அதிகரித்திருக்கிறது. அதோடு, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வரும் 103 பேரில் 31 பேருக்கு சுவாச உதவிக் கருவி பொருத்தப்பட்டிருக்கிறது.

-- பெர்னாமா