பொது

கொவிட்-19: நாட்டில், இன்று இதுவரையில் மேலும் நால்வர் மரணம்!!!

26/03/2020 06:25 PM

புத்ராஜெயா, 26 மார்ச் [பெர்னாமா] -- கொவிட்-19 காரணமாக, இன்று வியாழக்கிழமை நண்பகல் 12 மணி வரையில் நாட்டில், மேலும் நால்வர் உயிர் இழந்திருப்பதைத் தொடர்ந்து, இதுவரை பலியாகி இருப்போரின் எண்ணிக்கை 23-ஆக அதிகரித்திருக்கிறது. 

அதோடு, நாட்டில், இன்று மேலும் 235 புதிய கொவிட்-19 சம்பவங்கள் பதிவாகி இருக்கின்றன.

இதனைத் தொடர்ந்து நாட்டில், இந்நோய்க் கிருமியினால் பாதிப்படைந்திருப்போரின் எண்ணிக்கை இரண்டாயிரத்து 31-றாக அதிகரித்திருப்பதாக, சுகாதாரத் தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்திருக்கின்றார். 

-- பெர்னாமா