புத்ராஜெயா, 26 மார்ச் [பெர்னாமா] -- கொவிட்-19 காரணமாக, இன்று வியாழக்கிழமை நண்பகல் 12 மணி வரையில் நாட்டில், மேலும் நால்வர் உயிர் இழந்திருப்பதைத் தொடர்ந்து, இதுவரை பலியாகி இருப்போரின் எண்ணிக்கை 23-ஆக அதிகரித்திருக்கிறது.
அதோடு, நாட்டில், இன்று மேலும் 235 புதிய கொவிட்-19 சம்பவங்கள் பதிவாகி இருக்கின்றன.
இதனைத் தொடர்ந்து நாட்டில், இந்நோய்க் கிருமியினால் பாதிப்படைந்திருப்போரின் எண்ணிக்கை இரண்டாயிரத்து 31-றாக அதிகரித்திருப்பதாக, சுகாதாரத் தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்திருக்கின்றார்.
-- பெர்னாமா
© 2024 BERNAMA • உரிமைத் துறப்பு • தனியுரிமைக் கொள்கை • பாதுகாப்பு கொள்கை