கோலாலம்பூர், 26 மார்ச் [பெர்னாமா] -- நாட்டில், கொவிட்-19 நோய்க்கு மேலும் ஒருவர் இன்று மரணமடைந்தார்.
இதனைத் தொடர்ந்து இன்று நண்பகல் 12.00 மணி வரையில், இந்நோய்க்கு நாட்டில் மரணமடைந்திருப்போரின் எண்ணிக்கை 21 ஆகியிருக்கின்றது.
கடுமையாக நோய் வாய்ப்பட்டிருந்த 63 வயதுடைய, ஒரு மலேசியரான அவருக்கு, இந்நோய்க் கிருமித் தொற்றியிருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட 1,588 ஆவது நபர் என்று, சுகாதாரத் தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா இன்று தெரிவித்தார்.
அவர், கடந்த பிப்ரவரி 20 முதல் மார்ச் ஒன்றாம் தேதி வரையில், கோலாலம்பூர், ஶ்ரீ பெட்டாலிங் ஜமெக் பள்ளிவாசலில் நடைபெற்ற இஸ்லாமிய பேரணியில் கலந்து கொண்டவர் என்றும், டாக்டர் நோர் ஹிஷாம் கூறினர்.
அவருக்கு, கொவிட்-19 நோய்க் கிருமித் தொற்றியிருப்பது, இம்மாதம் 22-ஆம் தேதி உறுதிப்படுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அவர், மார்ச் 23-ஆம் தேதி கெடா, அலோஸ்டாரில் உள்ள சுல்தானா பஹியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் இன்று அதிகாலை நான்கு மணிக்கு அவர் மரணமடைந்ததாகவும் டாக்டர் நோர் ஹிஷாம் அறிவித்தார்.
-- பெர்னாமா
© 2024 BERNAMA • உரிமைத் துறப்பு • தனியுரிமைக் கொள்கை • பாதுகாப்பு கொள்கை