கப்பாளா பத்தாஸ், 01 பிப்ரவரி (பெர்னாமா) -- தைப்பூச திருநாளை முன்னிட்டு பினாங்கில் சுமார் 15 லட்சம் பக்தர்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் வேளையில் இரத ஊர்வலத்திற்காக சில முக்கிய சாலைகள் மூடப்படவிருக்கின்றன.
அதோடு, 1,250 பாதுகாப்பு உறுப்பினர்கள் பணிக்கு அமர்த்தப்படவிருப்பதாக, பினாங்கு போலீஸ் தலைவர் டத்தோ முஹமட் ஷுஹைலி முஹமட் சைன் தெரிவித்தார்.
தைப்பூசக் காலகட்டத்தில் பொது அமைதியைப் பாதுகாக்க தற்போதே தங்களின் பணிகளைத் தொடங்கி விட்டதாகக் கூறிய அவர் மேலும் சில தரப்பினரின் ஒத்துழைப்பும் பெறப்படவிருப்பதாகத் தெரிவித்தார்.
இக்காலகட்டத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் மக்கள் முடிந்தவரை திட்டமிட்டு பயணத்தை மேற்கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)
© 2024 BERNAMA • உரிமைத் துறப்பு • தனியுரிமைக் கொள்கை • பாதுகாப்பு கொள்கை