கோலாலம்பூர், 28 ஜனவரி (பெர்னாமா) -- கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அம்னோ உறுப்பினர்கள் விரும்பினால் நம்பிக்கை கூட்டணியில் சேரலாம் என்பது தொடர்பில், ஜ.செ.க பொதுச் செயலாளரான அந்தோனி லூக் சியூவ் ஃபூக் கருத்துரைத்துள்ளார்.
அம்னோவில் இருந்து நீக்கப்பட்டவர்கள், நம்பிக்கை கூட்டணியின் கீழ் உள்ள உறுப்பு கட்சிகளில் இணைவது என்பது அவர்களின் விருப்பத்தை பொறுத்தது என்று அந்தோனி லோக் கூறுகின்றார்.
கைரி ஜமாலுடின் மற்றும் டான் ஶ்ரீ நோ ஓமாரின் நீக்கம் ஒருமைப்பாட்டு அரசாங்கத்திற்கான ஆதரவைப் பாதிக்குமா, குறிப்பாக மாநிலத் தேர்தல்களில் அது தாக்கத்தை ஏற்படுத்துமா என்றும் அந்தோனி லோக்கிடம் வினவப்பட்டது.
அத்ற்கு, தற்போது இந்த ஒருமைப்பாட்டு அரசாங்கம், நாட்டின் நிர்வாகம் மற்றும் கொள்கையில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதாக அவர் பதிலளித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)
© 2024 BERNAMA • உரிமைத் துறப்பு • தனியுரிமைக் கொள்கை • பாதுகாப்பு கொள்கை