பொது

சீர்த்திருத்த கொள்கைகளுக்கு ஏற்ப நாடாளுமன்றம் தனியாக செயல்பட வேண்டும்

28/01/2023 06:15 PM

கோலாலம்பூர், 28 ஜனவரி (பெர்னாமா) -- நீதித்துறை மற்றும் நிர்வாக அமைப்புகளை சாராமல், சீர்த்திருத்த கொள்கைகளுக்கு ஏற்ப நாடாளுமன்றம் தனியாக செயல்பட வேண்டும்.

1963-ஆம் ஆண்டு நாடாளுமன்ற சேவை சட்டம் மற்றும் 1952-ஆம் ஆண்டு நாடாளுமன்ற மன்றச் சட்டம் ஆகியவற்றை திருத்தம் செய்வதன் மூலம் அந்த இலக்கை அடைய முடியும் என்று மேலவைத் தலைவர் டான் ஶ்ரீ டாக்டர் ராயிஸ் யாத்திம் கூறுகின்றார்.

நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மலேசிய பொருளாதாரத்தை மறுசீரமைத்தல் 1.0 குறித்து விரிவுரை வழங்கிய போது ராயிஸ் யாத்திம் அவ்வாறு தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)