உலகம்

சென்னை மெரினாவில் 74-வது குடியரசு தினக் கொண்டாட்டம்

26/01/2023 06:06 PM

சென்னை, 26 ஜனவரி (பெர்னாமா) -- தமிழ்நாட்டு அரசின் சார்பில் சென்னை மெரினாவில், 74-வது குடியரசு தினம் கொண்டாட்டப்பட்டது.

மெரினா கடற்கரைக்கு வந்த ஆளுநர் ஆர்.என். ரவியை முதல்வர் மு.க. ஸ்டாலின் வரவேற்றதை அடுத்து, தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது.

ஹெலிகாப்டரில் இருந்து மலர்கள் தூவப்பட்ட பின்னர், முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையையும் ரவி ஏற்று கொண்டார்.

அதனை தொடர்ந்து வீர தீரச்செயலுக்கான அண்ணா பதக்கங்களை ஸ்டாலின் ஐவருக்கு வழங்கினார்.

காவல்துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து, பள்ளி, மாணவ மாணவிகள், கல்லூரி மாணவமாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் அணிவகுப்பும் நடைபெற்றன.

இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு அரசு சார்பில் நடைபெற்ற குடியரசு தினவிழா கொண்டாட்டம் நிறைவடைந்தது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)