பொது

அமைச்சர் பொறுப்பு சவாலானது - மனிதவள அமைச்சர் சிவகுமார்

03/12/2022 08:25 PM

கோலாலம்பூர், 03 டிசம்பர் (பெர்னாமா) -- 15-வது பொதுத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணியில் பத்து இந்தியர்கள் வெற்றி பெற்றிருந்த வேளையில் அவர்களில் ஒருவருக்கு மட்டுமே அமைச்சர் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

மனிதவள அமைச்சின் பொறுப்பு மீண்டும் ஓர் இந்தியருக்கே வழங்கப்பட்டுள்ள நிலையில் அது தமக்கு மிகப் பெரிய சவாலாகவே இருக்கும் என்று முதன்முறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் வி.சிவகுமார் தெரிவித்தார். 

''இந்தியர்களிடையே அதிகமான எதிர்பார்ப்புகள் உள்ளன. என்னால் முடிந்தளவு நான் அவர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்திச் செய்வேன்,'' என்றார் அவர். 

துணை அமைச்சர்கள் யாரும் இன்னும் நியமிக்கப்படாத வேளையில், தற்போதைக்கு  இந்தியப் பிரதிநிதியாக சிவகுமார் ஒருவரே முடிவெடுக்கும் அதிகாரத்தைக் கொண்டிருக்கும் அமைச்சர் பொறுப்பை ஏற்கின்றார்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]