கோலாலம்பூர், 2 டிசம்பர் (பெர்னாமா) -- ஒருமைப்பாட்டு அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை நாளை சனிக்கிழமை, மாட்சிமை தங்கிய மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தாபா பில்லா ஷா முன்னிலையில் பதவி உறுதிமொழி எடுத்துக்கொள்வர்.
நாளை மாலை 3 மணிக்கு பதவியேற்பு சடங்கு நடைபெறும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று அறிவித்தார்.
அதன் பின்னர், அமைச்சரவை உறுப்பினர்களுடன் ஒரு சிறப்பு சந்திப்பை நடத்தவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கத்தில் அனைத்து முயற்சிகளையும் மையப்படுத்தும் நோக்கத்துடன் சில விதிமுறைகள், புதிய உக்திகள் போன்ற அம்சங்களை அறிமுகப்படுத்தும் நோக்கத்தில் அச்சந்திப்பு நடத்தப்படவிருப்பதாகவும் அன்வார் இன்று நடைபெற்ற அமைச்சரவை அறிவிப்பின்போது தெரிவித்தார்.
-- பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]
© 2024 BERNAMA • உரிமைத் துறப்பு • தனியுரிமைக் கொள்கை • பாதுகாப்பு கொள்கை