பொது

பொதுத் தேர்தல் விரைவில் வேண்டாம்; 12 அமைச்சர்கள் மாமன்னரிடம் கோரிக்கை

06/10/2022 06:49 PM

புத்ராஜெயா, 06 அக்டோபர் (பெர்னாமா) -- 15-வது பொதுத் தேர்தலை விரைவில் நடத்த வேண்டாம்.

இந்தக் கோரிக்கையை முன் வைத்து, அமைச்சரவையின் 12 அமைச்சர்கள் கொண்ட குழு, மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடின் அல்-முஸ்தாபா பில்லா ஷாவிடம் கடிதம் ஒன்றை சமர்ப்பித்துள்ளதை பெர்சத்து கட்சியின் உதவித் தலைவர் டத்தோ டாக்டர் ரட்சி ஜிடின் உறுதிப்படுத்தினார்.

புத்ராஜெயாவில், இன்று வியாழக்கிழமை, 2022-ஆம் ஆண்டு கல்வித் துறையில் தேசிய மொழியின் பத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொண்டப் பின்னர் ரட்சி ஜிடின் செய்தியாளர்களிடம் பேசினார்.

அக்கடிதம் மாமன்னரிடம் வழங்கப்பட்டதை பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் அறிந்திருப்பார் என்று கல்வி அமைச்சருமான ரட்சி கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)