உலகம்

2022ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசை வென்றார் விஞ்ஞானி ஸ்வான்டே பாபோ

03/10/2022 09:51 PM

ஸ்டோக்ஹோம், 03 அக்டோபர் (பெர்னாமா) -- 2022ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு ஸ்வீடன் நாட்டை சேர்ந்த விஞ்ஞானி  ஸ்வான்டே பாபோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஒவ்வோர் ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய 6 துறைகளில் சிறந்த சாதனை படைத்தவர்களுக்கு உலகின் மிக உயரிய விருதாக கருதப்படும் நோபல் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்படும். 

அந்த வகையில் 2022ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் இன்று முதல் அறிவிக்கப்படுகிறது. 

முதல் நாளான இன்று மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. 

அதில், 'அழிந்துபோன ஹோமினின்களின் மரபணுக்கள் மற்றும் மனித பரிணாமம் பற்றிய ஸ்வான்டேவின் கண்டுபிடிப்புகளுக்காக' அவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)