BREAKING NEWS | Former inspector general of police (IGP) Tun Mohammed Hanif Omar died at 2.15 am today - Son | Bekas Ketua Polis Negara (KPN) Tun Mohammed Hanif Omar meninggal dunia pada 2.15 pagi tadi - Anak | |
ரொக்ஹெம்டன், 19 ஆகஸ்ட் (பெர்னாமா) -- 2002-ஆம் ஆண்டு இந்தோனேசியா, பாலியில் நூற்றுக் கணக்கான மக்களைப் பலியாக்கிய குண்டு வெடிப்புக்கு காரணமான ஆடவரின் தண்டனை காலம் குறைக்கப்பட்டதை ஆஸ்திரேலிய பிரதமர் இன்று உறுதிபடுத்தினார்.
700 கிலோகிராம் எடைக் கொண்ட வெடிகுண்டை இரு இரவு மனமகிழ்வு மையங்களில் வைத்து 88 ஆஸ்திரேலியர்கள் உட்பட 202 பேர் உயிரிழப்பதற்கு காரணமான உமார் பத்தெக் எனும் அவ்வாடவருக்கு, 2012-ஆம் ஆண்டு தொடங்கி 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப் பட்டது.
ஆகஸ்ட் 17-ஆம் தேதி இந்தோனேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு 10 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் இருந்த பத்தெக்கின் தண்டனை காலம் தற்போது 5 மாதங்கள் குறைக்கப்பட்டிருக்கிறது.
இது குறித்து, இந்தோனேசிய அரசாங்கம் ஆஸ்திரேலிய அரசாங்கத்திடம் தெரிவித்திருப்பதைத் தொடர்ந்து தங்கள் கருத்தை தமது தரப்பு அவர்களிடம் முன்வைத்ததாகவும் எண்டனி அல்பானிஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அடுத்த மாத இறுதியில் நிபந்தனைக்குட்பட்டு பத்தெக் விடுவிக்கப்படலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் அவரின் விடுதலை குறித்து இந்தோனேசியா மௌனம் சாதித்தது.
-- பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)]
© 2024 BERNAMA • உரிமைத் துறப்பு • தனியுரிமைக் கொள்கை • பாதுகாப்பு கொள்கை